Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சிவராத்திரி விரதம்

அடியார்களே,
ஈழத்திருநாட்டின் வடபால் வன்னிப்பிரதேசத்தில் வெங்கலச்செட்டிகுளம் பகுதியில் வரலாற்றுப்புகழ் மிக்க மூர்த்தி தலம் தீர்த்தச் சிறப்புப் பெற்ற வௌவாலை சந்திரசேகரீச்சரம் சிவனாலயத்தில் நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள் திங்கட்கிழமையன்று (07.03.2016 ம் திகதி)  காலையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அன்று இரவு மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு  நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வழிபாடுகள் செய்வதற்கு திருவருள் கூடியுள்ளது.

மெய்யடியார்களே மகத்துவமிக்க இந்த மகா சிவராத்திரி நாளிலே ஆலயத்திற்கு வருகை தந்து மகா சிரைாத்திரி விரதத்தை அனுட்டித்து பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தமான வௌவாலையில் நீராடி தங்களின் கரங்களினாலே சிவலிங்கத்துக்கு அபிடேகம் செய்து புண்ணியம் பெறுவீர்களாக.

அடியார்களே பூசைக்குத் தேவையான பால், பழவகைகள், இளநீர், பூக்கள், பூமாலைகள், போன்றவற்றையும் அர்ச்சனைப் பொருட்களையும் ஆலயத்திற்கு கொண்டு வரவும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  மறுநாள் காலை அன்னதானம் வழங்கப்படும்.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

வௌவாலை சந்திரசேகரீச்சரத்தில் மாசி மாதப் பௌர்ணமி வழிபாடு - மாசி மகம் தீர்த்த பூஜை












மெய்யடியார்களே வௌவாலை சந்திரசேகரீச்சரத்தில்  மன்மத வருடம் மாசி மாதம் 10 ம் நாள் திங்கட்கிழமை ஆகிய (22.02.2016) இன்று மாசி மகம் - மாசி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு விசேடமாக சந்திரசேகரீச்சரப் பெருமானுக்கு அபிடேக ஆராதானைகள் இடம்பெற்றன. அத்துடன் வௌவாலையில் புனித தீர்த்த பூஜையும் இடம்பெற்றது.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

Vinayagane vinai theerpavane வினாயகனே வினை தீர்ப்பவனே

கதிர்காம முருகையா உருகையா Kathirkama Murugaiya Urukaiya

வினாயகனே வினை திர்ப்பவனே........... பாடல் (சீர்காழி எஸ். கோவிந்தராஜன் பாடியது)Vinayagane Vinai theerpavane song by Sirkali Govindarajan