Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

செவ்வாய், 12 நவம்பர், 2019

ஐப்பசி மாதப் பௌர்ணமி 2019


இன்று ஐப்பசி மாதப் பௌர்ணமி நாளை முன்னிட்டு சந்திரசேகரீச்சரம் எம்பெருமானின் லிங்கத்திருமேனியிற்கு அன்ன அபிஷேகம் செய்து வழிபட்டோம். எல்லா உயிர்கட்கும் உணவளித்து காக்கின்ற ஈசனுக்கு அன்ன அபிஷேகம் செய்து நன்றிக்கடன் செலுத்தினோம்.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி மகட்கு. (திருவள்ளுவர்)


அடர்ந்த காட்டுக்குள் நடந்து சென்றோம். மழையின் காரணமாக பாதை சேறாகக் காணப்பட்டது. இப்பாதையில் காட்டுயானைகள் நடந்து சென்றதனால் பாதையெங்கும் கிடங்குகளாக இருந்தன. சிரமப்பட்டு நடந்து சென்று சந்திரசேகரீச்சரப்பெருமானைக் கண்டமாத்திரத்தில் கவலைகளையெல்லாம் மறந்தோம் பேரானந்தங்கொண்டோம்.


அபிடேக ஆராதனைகள் செய்தும் சிறப்பாக அன்ன அபிடேகம் செய்தும் வழிபட்டோம்.