Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வெள்ளி, 30 செப்டம்பர், 2016

புரட்டாதி மாத மகாளய பட்ஷ பூசைகள்

30.09.2016 திகதியாகிய இன்று சந்திரசேகரீச்சரத்தில் எம்பெருமானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் சிறப்பாக இடம்பெற்றன.

முன்னோர்களுக்கான வழிபாடுகளும் வௌவாலைக் கேணியிலே இடம்பெற்றன.

ஆலயத்திலே முன்னோர்களுக்கான மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன.


இக்கட்டான ஒரு சூழலிலும் இத்தகைய அரிய கைங்கரியங்களைச் செய்ய வைத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி சொல்லுகின்றோம்.

திங்கள், 5 செப்டம்பர், 2016

சந்திரசேகரீச்சரத்தில் ஆவணி மாத வினாயக சதுர்த்தி

உலககெலாம் பரந்து வாழுகின்ற மெய்யடியார்களிற்கு வணக்கம்

துன்முகி வருடம் ஆவணி மாதம் 20 ம் நாள் திங்கட்கிழமையான இன்று (2016.09.05) பன்னெடுங்காலத்தின் பின் வரலாற்றில் முதல் தடவையாக சந்திரசேகரீச்சரத்தில் மகத்துவமிக்க வினாயக சதுர்த்தி விரதப் பூசைகள் இடம்பெற்றன. இந்த சிறப்பான வினாயக சதுர்த்தி நாளான இன்று எளிமையாக ஆனால் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. வினாயகப்பெருமானுக்கும் சிவபிரானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்றன.

மாவினால் செய்யப்பட்ட வினாயகப்பெருமான் வௌவாலை தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளினார். அங்கும் வழிபாடுகள் ஆற்றப்பெற்றன.