Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வியாழன், 21 ஏப்ரல், 2016

சித்திரைப் பூரணை வழிபாடு

மெய்யடியார்களே வணக்கம்
21.04.2016 ம் திகதி வியாழக்கிழமையான இன்று சந்திரசேகரீச்சரத்தில் சித்திரைப்பூரணை விரதத்தை முன்னிட்டு சித்திரைக்கஞ்சிப் படையலுடன் மடையும் பரவப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இன்று மழைக்கான அறிகுறி எதுவுமில்லாத போதிலும் ஆலயத்தின் மேலாக வானில் சுமார் 300 அடி விட்டம் கொண்டதாக கருமுகில் சூல்கொண்டு மழைத்துளிகள் வீழ்ந்தன. எனினும் முற்றத்தில் மூட்டியிருந்த அடுப்பு அணைந்து விடாமல் கஞ்சி வெந்துகொண்டிருந்த பானையினுள் மழைத்துளிகள் வீழ்ந்தன. ஆகாய கங்கையும் தன்பங்குக்கு கஞ்சி காய்ச்ச தண்ணீர் தந்தது போலும். 

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சித்த யோகியர் செய்த சிறப்பு யாகம்

மெய்யடியார்களே வணக்கம்
குறிப்பிட்டது போலவே கடந்த 07.04.2016 ம் திகதியன்று எமது வெளவாலை சிவனாலயமான சந்திரசேகரீச்சரத்தில் சித்த யோகிமார் கலந்து கொண்டு யாகம், யோகம், பயிற்சி, தீட்சை போன்றனவற்றை செய்தனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற தூர இடங்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் செட்டிகுளம் பகுதியில் இருந்தும் பல அடியார்கள் கலந்துகொண்டனர்.

சில அற்புதங்கள்

  • தந்திரிமலை, செட்டிகுளம், சிப்பிக்குளம் போன்ற பல இடங்களில் அன்று கடும் மழை கொட்டித்தீர்த்தது. ஆயினும் எம்பெருமானின் இருப்பிடத்தைச்சூழ சிறு அளவிலேதான் மழை தூறிய வண்ணம் இருந்தது. ஒருவாறு மரத்தடிகளை நிறுத்தி தற்காலிக கொட்டகை அமைத்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒருதடவை பலத்த மழை பெய்து நிலமெங்ஙனமும் கடும் ஈரமாகிவிட்டது. சிறுமழை பெய்தால்கூட ஆலயச்சூழல் சேறும் சகதியுமாகிவிடும். வழக்கம்போல் இறைவன்மீது வேண்டுதலை வைத்துவிட்டு எமது பணியைத்தொடர்ந்த வண்ணமிருந்தோம். பாதுகாப்புக்கடமைகளையாற்ற வரும் காவல்துறையினரை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி தடம்புரளுமளவுக்கு காட்டுப்பாதை சகதியாக மாறியிருந்தது. தெய்வாதீனமாக விபத்து ஏதும் இன்றி அவர்கள் வந்து சேர்ந்தனர். சுமார் அரை மணிநேரம் சென்றிருக்கும் ஆலய நிலமும் காட்டுப்பாதையும் மழைபெய்ததற்கான அறிகுறி எதுவுமின்றி பழையபடி கட்டாந்தரையாக காய்ந்துவிட்டன. இது ஈசனின் திருவிளையாடலன்றோ?
  • வினாயகர் வழிபாடு தொடங்கியதும் சற்றுத்தொலைவில் காட்டு யானைகள் பிழிறின. இது வினாயகப்பெருமானின் ஆசிர்வாதம்போலும்.
  • புகைப்படம் எடுத்துப்பார்த்தபோது யாகத்தீயின் சுடர்கள் தெய்வங்களின் உருவங்களாக காட்சிதந்தன.

திங்கள், 4 ஏப்ரல், 2016

சித்த யோகிமார் கலந்து சிறப்பிக்கும் மகா யாக யோக பயிற்சி - விசேட யாகமும் வழிபாடுகளும்


மெய்யடியார்களே வணக்கம்

எமது சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் எதிர்வரும் 07.04.2016 ம் திகதி வியாழக்கிழமை மாலை நேரத்தில் இருந்து அன்றிரவு முழுவதும் விசேட யாகபூசை இடம்பெற உள்ளது.

இலங்கையின்  சித்தர்கள் யோகிகள் அதிகளவில் கலந்து சிறப்பிக்கும் மகா யாகயோக பயிற்சிகளும் இரவு முழுவதும் இடம் பெறும். சித்த அடியார்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்....


நன்றி:- சித்தர்களின்குரல் முகநூல். தகவலுக்கும் புகைப்பட வெளியீட்டுக்கும்