Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சித்த யோகியர் செய்த சிறப்பு யாகம்

மெய்யடியார்களே வணக்கம்
குறிப்பிட்டது போலவே கடந்த 07.04.2016 ம் திகதியன்று எமது வெளவாலை சிவனாலயமான சந்திரசேகரீச்சரத்தில் சித்த யோகிமார் கலந்து கொண்டு யாகம், யோகம், பயிற்சி, தீட்சை போன்றனவற்றை செய்தனர்.

திருகோணமலை, மட்டக்களப்பு, கொழும்பு போன்ற தூர இடங்களில் இருந்தும் வவுனியா நகரில் இருந்தும் செட்டிகுளம் பகுதியில் இருந்தும் பல அடியார்கள் கலந்துகொண்டனர்.

சில அற்புதங்கள்

  • தந்திரிமலை, செட்டிகுளம், சிப்பிக்குளம் போன்ற பல இடங்களில் அன்று கடும் மழை கொட்டித்தீர்த்தது. ஆயினும் எம்பெருமானின் இருப்பிடத்தைச்சூழ சிறு அளவிலேதான் மழை தூறிய வண்ணம் இருந்தது. ஒருவாறு மரத்தடிகளை நிறுத்தி தற்காலிக கொட்டகை அமைத்துக்கொண்டிருந்தோம். திடீரென ஒருதடவை பலத்த மழை பெய்து நிலமெங்ஙனமும் கடும் ஈரமாகிவிட்டது. சிறுமழை பெய்தால்கூட ஆலயச்சூழல் சேறும் சகதியுமாகிவிடும். வழக்கம்போல் இறைவன்மீது வேண்டுதலை வைத்துவிட்டு எமது பணியைத்தொடர்ந்த வண்ணமிருந்தோம். பாதுகாப்புக்கடமைகளையாற்ற வரும் காவல்துறையினரை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி தடம்புரளுமளவுக்கு காட்டுப்பாதை சகதியாக மாறியிருந்தது. தெய்வாதீனமாக விபத்து ஏதும் இன்றி அவர்கள் வந்து சேர்ந்தனர். சுமார் அரை மணிநேரம் சென்றிருக்கும் ஆலய நிலமும் காட்டுப்பாதையும் மழைபெய்ததற்கான அறிகுறி எதுவுமின்றி பழையபடி கட்டாந்தரையாக காய்ந்துவிட்டன. இது ஈசனின் திருவிளையாடலன்றோ?
  • வினாயகர் வழிபாடு தொடங்கியதும் சற்றுத்தொலைவில் காட்டு யானைகள் பிழிறின. இது வினாயகப்பெருமானின் ஆசிர்வாதம்போலும்.
  • புகைப்படம் எடுத்துப்பார்த்தபோது யாகத்தீயின் சுடர்கள் தெய்வங்களின் உருவங்களாக காட்சிதந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக