Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வியாழன், 24 நவம்பர், 2016

சந்திரசேகரீச்சரம் பற்றிய ஆய்வுகள் வீரகேசரிப் பத்திரிகையில் திரு. அருணா செல்லத்துரை அவர்களால்

அன்பர்களே வீரகேரிப் பத்திரிகையில் ” ஒரு உடகவியலாளளனின் ஊடறுப்பு” என்ற தலையங்கத்தின் கீழ் திரு. அருணா செல்லத்துரை அவர்கள் வன்னிப் பிரதேசத்தின் வரலாறுகள் பற்றி தொடர்ச்சியாக பல அய்வுக்கட்டுரைகளை எழுதி வருகின்றார். அந்த வகையில் எமது சந்திரசேகரீச்சரம் பற்றியும் வௌவாலைக் கேணி தொடர்பாகவும் சில ஆய்வுக்குறிப்புகளை படங்களுடன் வெளியிட்டுள்ளார். பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைப்பக்கத்தை புகைப்படம் எடுத்து இங்கு வெளியிடுகின்றோம். (நன்றி - அருணா செல்லத்துரை அவர்களுக்கும் வீரகேசரி பத்திரிகையினருக்கும்)
பத்திரிகையின் முழுப்பக்கத்திலும்உள்ள கட்டுரையும் படங்களும்

பத்திரிகையில் இருந்து பெரிதாக்கி எடுக்கப்பட்ட புகைப்படம்

சனி, 12 நவம்பர், 2016

மகாப் பிரதோசம் / சனிப் பிரதோசம் - வில்வ தோத்திரம்

வணக்கம் சிவபிரான் அடியார்களே

மகா பிரதோச விரதமான சனிப்பிரதோச விரத நாளான இன்று (12.11.2016) சந்திரசேகரீச்சரப்பெருமானுக்கு பிரதோச பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

கணபதி பூசை, பஞ்சகவ்விய பூசை, அபிடேக ஆராதனைகள் செய்தோம்.

அபிடேக வேளையில் தெய்வ உருவ சாந்நித்தியம் நன்கு உணரப்படக்கூடியதாக இருந்தது. வினாயகரின் உருவம் பிரமாண்டமானதாக காட்சியளித்தது. இதன்பொழுது காட்டுயானைகள் பிளிறின.

ம்பெருமான் வெளிக்கொண்டு வரப்பட்ட பின்னரான வரலாற்றில் முதற்றடவையாக வில்வ தோத்திர பாராயணம் செய்யப்பட்டது. இதன்போதும் காட்டு யானைகள் மகிழ்ச்சி ஆரவாரமாய் ஓசைகளையும் பிளிறல்களையும் வெளிப்படுத்தின. நேற்றய நாளான வெள்ளிக்கிழமை மாலைநேர பூசையின்போது எம்பெருமானுக்கு அண்மையில் இரண்டு காட்டுயானைகள் பார்த்தவண்ணம் நின்றிருந்தன. எமக்கு எத்துன்பத்தையும் விளைவிக்கவில்லை.

காட்டுப்பகுதி என்பதனால் மின்சாரவசதி கிடையாது. எனினும் மூன்று அகல்விளக்குகளை ஏற்றி வைத்துவிட்டு அவ்வெளிச்சத்திலேயே பூசைகளைச் செய்தோம். சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இடம்பெற்ற அதே பாரம்பரிய முறைப்படியான பூசைவழிபாட்டு முறைகளையே இன்றளவும் செய்யக்கிடைக்கப்பெற்றது எமது தவப்பயனேயாகும். இந்த வகையில் எமது முன்னோர்கள் எந்த வகையிலும் முன்னோடிகள்தான் என எண்ணத்தோன்றுகிறது.


மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”.