Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

வியாழன், 21 ஏப்ரல், 2016

சித்திரைப் பூரணை வழிபாடு

மெய்யடியார்களே வணக்கம்
21.04.2016 ம் திகதி வியாழக்கிழமையான இன்று சந்திரசேகரீச்சரத்தில் சித்திரைப்பூரணை விரதத்தை முன்னிட்டு சித்திரைக்கஞ்சிப் படையலுடன் மடையும் பரவப்பட்டு சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

இன்று மழைக்கான அறிகுறி எதுவுமில்லாத போதிலும் ஆலயத்தின் மேலாக வானில் சுமார் 300 அடி விட்டம் கொண்டதாக கருமுகில் சூல்கொண்டு மழைத்துளிகள் வீழ்ந்தன. எனினும் முற்றத்தில் மூட்டியிருந்த அடுப்பு அணைந்து விடாமல் கஞ்சி வெந்துகொண்டிருந்த பானையினுள் மழைத்துளிகள் வீழ்ந்தன. ஆகாய கங்கையும் தன்பங்குக்கு கஞ்சி காய்ச்ச தண்ணீர் தந்தது போலும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக