Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

திங்கள், 5 செப்டம்பர், 2016

சந்திரசேகரீச்சரத்தில் ஆவணி மாத வினாயக சதுர்த்தி

உலககெலாம் பரந்து வாழுகின்ற மெய்யடியார்களிற்கு வணக்கம்

துன்முகி வருடம் ஆவணி மாதம் 20 ம் நாள் திங்கட்கிழமையான இன்று (2016.09.05) பன்னெடுங்காலத்தின் பின் வரலாற்றில் முதல் தடவையாக சந்திரசேகரீச்சரத்தில் மகத்துவமிக்க வினாயக சதுர்த்தி விரதப் பூசைகள் இடம்பெற்றன. இந்த சிறப்பான வினாயக சதுர்த்தி நாளான இன்று எளிமையாக ஆனால் சிறப்பான முறையில் பூசை வழிபாடுகள் இடம்பெற்றன. வினாயகப்பெருமானுக்கும் சிவபிரானுக்கும் ஏனைய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்றன.

மாவினால் செய்யப்பட்ட வினாயகப்பெருமான் வௌவாலை தீர்த்தக்கேணிக்கு எழுந்தருளினார். அங்கும் வழிபாடுகள் ஆற்றப்பெற்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக