Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

சனி, 2 மார்ச், 2019

மகா சிவராத்திரி 04.03.2019


அடியார்களே,
ஈழத்திருநாட்டின் வடபால் வன்னிப்பிரதேசத்தில் வெங்கலச்செட்டிகுளம் பகுதியில் வரலாற்றுப்புகழ் மிக்க மூர்த்தி தலம் தீர்த்தச் சிறப்புப் பெற்ற வௌவாலை சந்திரசேகரீச்சரம் சிவனாலயத்தில் நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மாசி மாதம் 20 ம் நாள் திங்கட்கிழமையன்று (04.03.2019 ம் திகதி)  காலையில் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி அன்று இரவு மகா சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு  நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெற்று வழிபாடுகள் செய்வதற்கு திருவருள் கூடியுள்ளது.

மெய்யடியார்களே மகத்துவமிக்க இந்த மகா சிவராத்திரி நாளிலே ஆலயத்திற்கு வருகை தந்து மகா சிவராத்திரி விரதத்தை அனுட்டித்து பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு புண்ணிய தீர்த்தமான வௌவாலையில் நீராடி தங்களின் கரங்களினாலே சிவலிங்கத்துக்கு அபிடேகம் செய்து புண்ணியம் பெறுவீர்களாக.

அடியார்களே பூசைக்குத் தேவையான பால்பழவகைகள்இளநீர்பூக்கள்பூமாலைகள்போன்றவற்றையும் அர்ச்சனைப் பொருட்களையும் ஆலயத்திற்கு கொண்டு வரவும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு  மறுநாள் காலை அன்னதானம் வழங்கப்படும்(அன்னதானம் செய்ய அடியார்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றோம்).

(ஆலயம் அமைந்துள்ள பகுதி காட்டுச்சூழல் என்பதனால் யானைகள் போன்ற காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலைத் தவிர்க்கும் பொருட்டு மாலை 05.00 மணிக்கு முன்னரே ஆலயத்துக்கு வந்துசேருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக