மெய்யடியார்களே வணக்கம்
எம்பெருமானின்
திருவருள் பாலித்ததற்கு அமைய இவ்வாண்டும் நிகழும் மன்மத வருடம் மாசி மாதம் 24 ம் நாள்
திங்கட் கிழமையன்று (07.03.2016) மகா சிவராத்திரி வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றது.
பகலும் இரவும் பூசைகள் இடம்பெற்றன. நான்கு சாமப் பூசைகளும் கிரமமாக நடந்தேறியது.
வழிபாட்டு முறைகள் வன்னிப்பகுதிக்கேயுரிய தனித்துவமான பத்ததிகளின்படி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அடியார்கள் வௌவாலைக் கேணியில் தீர்த்தம் எடுத்துக் கொண்டுவந்து தமது கரங்களால் அபிடேகம் செய்யும் பாக்கியம் பெற்றனர். விடியும் வரை கண்விழித்து வழிபாடாற்றினர்.
வழமைபோல் இம்முறையும் சிவகாயத்திரி யாகம் சிறப்புற இடம்பெற்றது.
வினாயகருக்கான
சிறப்பு வழிபாடுகளும் பூசைகளும் இடம்பெற்றன.
இம்முறை வவுனியாவில் இருந்தும் தந்திரிமலையில் இருந்தும் அடியார்கள் பலர் அதிகளவில் கலந்துகொண்டனர்.
காவல்துறையினர் விடிய விடிய பணியாற்றிக் கொண்டிருந்தனர். பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டு உவகைகொண்டனர்.
மறுநாட்காலை மாகேசுரபூசையாகிய அன்னதானம் வழங்கப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக