Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

புதன், 20 ஜனவரி, 2016

இறைவனும் ஆன்மாக்களின் நிலையும்

ஆன்மாக்களாகிய நாம் முத்தியடையும்பொருட்டுக் கருணைப் பெருங்கடலான சிவபெருமான் தடத்தநிலையைவிடவும் கீழ்நிலைப்பட்டு வந்து குணங்குறிகளைத் தனக்கு கற்பித்தும் அருவம் அருவுருவம் உருவம் முதலாய நிலைகளைத் தாங்கியும் ஐந்தொழில்களையும் புரிபவனாய் நின்று எமக்குத் தனுகரண புவன போகங்களைத் தந்துள்ளான். உயிர்கள் தமக்கு ஞான நிலை வந்தெய்தும்பொழுதே இவற்றை உணரவல்லதாகின்றன. அதுவரை அவை அஞ்ஞான இருளில் மூழ்கிக்கிடக்க வேண்டியதாகின்றன. ஆன்மா ஏன் இறைவனை அடையமுடியாமல் தடுக்கப்படுகிறது, இங்கு தடையாயிருப்பது என்ன?. இவை பற்றிய தகுந்த விளக்கங்களை வரவிருக்கும் பதிவீடுகளில் பார்ப்போம். மேலும் கடந்த பதிவில் குறிப்பிட்டவாறு சந்திரசேகரீச்சரம் குறித்த செய்திகளையும் பார்ப்போம், வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக