மெய்யடியார்களே நிகழும் மன்மத வருடம் தை மாதம் 10 ம் நாளன்று (எதிர்வரும் 2016.01.24 திகதி, ஞாயிற்றுக்கிழமை) சந்திரசேகரீச்சரப் பெருமானுக்கும் வினாயகர், முருகன் முதலிய மூர்த்திகளுக்கும் அபிடேக ஆராதனைகள் இடம்பெற்று தைப்பூச வழிபாடு நடாத்தப்படவுள்ளது. சில 100 ஆண்டுகளுக்குப்பின்னர் இத்தகைய தைப்பூச நன்னாள் ஒன்றில்தான் எம்பெருமானை நிலைநிறுத்தினோம் (பிரதிஷ்டை செய்தோம்) என்பதும் குறிப்பிடத்தக்கது. விரும்பும் அடியார்கள் வந்து கலந்து கொண்டு இறையருள் பெற அழைக்கின்றோம்.
குறிப்பு - காலையில் இருந்து மாலை வரை வழிபாடுகள் இடம்பெறும். ஆலயச்சூழல் காடடர்ந்த பிரதேசம் என்பதைனாலும் யானை போன்ற காட்டு விலங்குகளின் அச்சுறுத்தல் இருக்கக்கூடுமாதலாலும் பகல் வேளையில் வருகைதருவது நன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக