Santhirasekareecharam

Santhirasekareecharam
சந்திரசேகரீச்சரம்

சனி, 9 ஜனவரி, 2016

சிவபூமி என திருமூலரால் போற்றப்பட்ட ஈழத்திருநாட்டின் சிவாலயங்கள்

உலகெலாம் பரந்து வாழுகின்ற சைவப் பெருமக்களிற்கு வௌவாலை சந்திரசேகரீச்சரப் பெருமானின் பேரருள் கிட்டுவதாக. 

மெய்யடியார்களே வணக்கம், ஈழத்திருநாட்டில் பல சிவாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகளாலும் தேவாரம் பாடப்பெற்ற தலங்களாக திருக்கோணேச்சரமும் திருக்கேதீச்சரமும் விளங்குகின்றன. மேலும் முன்னேச்சரம், நகுலேச்சரம், இலங்கையின் தென்கோடியிலே தெய்வேந்திர முனைக்கண்மையில் தொண்டீச்சரம் என்பனவும் காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது ஒட்டுசுட்டான் தான்தோன்றியீச்சரம், கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீச்சரம் என்பனவும் தமக்கேயுரிய தனிச்சிறப்புடன் திகழ்கின்றன. வரலாற்றுச் சிறப்புப் பெற்றதும் விஜய மன்னனின் வருகைக்கு முன்னரே இங்கு காணப்பட்டதும் மூர்த்தி தல தீர்த்தச்சிறப்பு மிக்கதும் வன்னி மன்னர்களால் ஆதரிக்கப்பெற்றதும் தென்னிந்திய வணிகனான தமிழகத்தைச்சேர்ந்த வீரவராஜன் செட்டி (வீரநாராயணச் செட்டி) என்பவரால் திருப்பணி செய்யபட்டதுமான சந்திரசேகரீச்சரம் (சந்திரசேகரீஸ்வரம்) பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அது இருந்தே சுவடேயில்லாமல் அழிந்துபோயும் தேடிச்சென்று கண்டடைய முடியாதபடி காடுமண்டிக்கிடப்பதும் யார் கண்ணிலும் படாமல் இருப்பதையும் நினைக்க சற்றுத்தயக்கமாகத்தான் இருக்கிறது. இருப்பினும் இறையருள்  உந்தப்பெற்று சந்திரசேகரீச்சரப் பெருமான் இருந்த இடத்தை ஒருவாறு அடியேன் தேடியறிந்து பல இடர்களையும் தாண்டி தற்பொழுது வழிபாடு இடம்பெறுமளவுக்கு செய்துள்ளேன். இவ்வாலய வரலாற்றுச்சிறப்பையும் உத்தம அடியார்கள் செய்த உதவிகளையும் கிடைக்கப்பெற்ற அரச உதவிகள் பற்றியும் தொடர்ச்சியாகப் பார்க்கலாம். அடியார்களின் அனுபவப் பகிர்வுகளும் இடம்பெறும். வாழ்க வளமுடன். அன்பே சிவம். ஓம் நமசிவய.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக